ரஷியாவில் அடுத்த வாரம் முதல் கரோனா தடுப்பூசியை பரவலாக செலுத்துவதற்கு அதிபர் விளாதிமீர் புதின் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் புதின் தெரிவித்ததாவது:
"அடுத்த வார இறுதியில் பெரிதளவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்குவோம். தடுப்பூசி செலுத்தப்படுவதில் ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்."
இதன்மூலம், ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருகிறது.