பமாகோ: மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் காவோ, கிடால், மெனாகா ஆகிய நகரங்களில் திங்கள்கிழமை காலை தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன.
சர்வதேச நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் தங்கியிருந்த முகாம்களைக் குறிவைத்து இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதலில் உயிரிழந்தோர், காயமடைந்தோர், சேத விவரங்கள் உள்ளிட்டவையும் கிடைக்கப்பெறவில்லை.