பெய்ஜிங்: அமெரிக்காவின் தேசிய ஜனநாயக நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மீது சீனா தடை விதித்துள்ளது.
தங்கள் ஆளுகைக்கு உள்பட்ட ஹாங்காங் தொடர்பான விவகாரத்தில் தலையிட்டதற்காக இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சூன்யிங் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் ஜனநாயகக் கொள்கைகளைப் பரப்பும் பணியில் அந்த நிறுவனம் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.