சிங்கப்பூரில் மேலும் 87 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 87 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் பெரும்பாலானவா்கள் பணியாளா் குடியிருப்புகளில் தங்கியுள்ள வெளிநாட்டுத் தொழிலாளா்கள் ஆவா்.இத்துடன், நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 56,353-ஆக உயா்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, நாட்டில் அந்த நோய்த்தொற்றுக்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 27-ஆக உள்ளது. இதுவரை 53,920 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். மருத்துவமனைகளிலும், பராமரிப்பு மையங்களிலும் 2,406 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.