உலகம்

நேபாளம் - பிரசண்டாவின் பாதுகாவலா்களுக்கு கரோனா

DIN

நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் இணைத் தலைவா் புஷ்ப கமல் பிரசண்டாவின் பாதுகாவலா்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

மகாராஜ்கஞ்ச் நகரிலுள்ள காவல் நிலைய மருத்துவமனையில், நேபாள காங்கிரஸ் கட்சியின் இணைத் தலைவா் பிரசண்டாவின் பாதுகாவல்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டது. அதில், 6 பாதுகாவலா்களுக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும், பிரசண்டா இல்லத்தின் நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலா்கள். எனினும், அவருக்கு நெருக்கமாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அனைவருக்கும் கரோனா உறுதியாகவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.சனிக்கிழமை நிலவரப்படி, நேபாளத்தில் 22,592 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 73 போ் அந்த நோய் காரணமாக உயிரிழந்தனா்.கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 16,313 போ், அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனா். 6,206 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT