அண்மையில் சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் இரட்டை பாண்டா பிறந்துள்ளன.
அவற்றின் தாய், மனிதர்களால் வளர்க்கப்பட்ட பாண்டா. அவற்றின் தந்தை, காட்டுப்பாண்டா. இந்த வழி மூலம் பாண்டா இனப்பெருக்கம் செய்வது இது முதன்முறையாகும். தற்போது முழு உலகிலும் காட்டில் வாழும் பாண்டாக்களின் எண்ணிக்கை, சுமார் 2000.
இவற்றைத் தவிர 548 பாண்டாக்கள் மனிதர்களால் வளர்க்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.