இதைச் செய்தால்தான் இந்தியாவுடன் பேச்சுவார்த்தையாம்: இம்ரான் கான் திட்டவட்டம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்பட்டால் மட்டுமே இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இதைச் செய்தால்தான் இந்தியாவுடன் பேச்சுவார்த்தையாம்: இம்ரான் கான் திட்டவட்டம்


இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்பட்டால் மட்டுமே இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைக்கப்பட்டடிருக்கும் ஒன்றிணைந்த வர்த்தக மையத்தை துவக்கி வைத்துப் பேசிய இம்ரான் கான் இதைக் கூறினார்.

காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு, சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் சட்டப்பிரிவு 370 மீண்டும் கொண்டு வரப்படாமல் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் எந்த பயனும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com