மக்களவைத் தேர்தலில், ஹிமாசலப் பிரதேச மாநிலம் காங்க்ரா தொகுதியிலுள்ள பழங்குடியின கிராமத்தில் 100 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
காங்க்ரா தொகுதிக்குட்பட்ட அந்த கிராமத்தின் பெயர் பாரா பன்வால் ஆகும். இக்கிராமத்தில் கடந்த 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 100 சதவீத வாக்குகள் பதிவாகின. கிராமத்தைச் சேர்ந்த 135 வாக்காளர்களும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். மக்களவைக்கு 7ஆவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற்றபோது, காங்க்ரா தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அத்தொகுதியில் மொத்தம் 70.49 சதவீத வாக்குகள் பதிவாகின.