அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்திலுள்ள கட்டடமொன்றுக்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதி துர்கா அகர்வால் மற்றும் சுசீலா அகர்வாலின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களான அந்த இருவரும், ஆய்வுப் பணிகளில் சிறந்த பங்களிப்பு வழங்கியதற்காக இந்த கெளரவம் அளிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொறியியல் ஆய்வுத் துறைக்கான அந்தக் கட்டடம், 2017-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது ஆகும்.