தாய்லாந்து மன்னர் வஜ்ராலங்கரணுக்கு முடிசூட்டும் விழா, 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சனிக்கிழமை தொடங்கிய இந்த விழாவில் தாய்லாந்தின் 10-ஆவது மன்னராக முடிசூட்டப்பட்ட வஜ்ராலங்கரண், பாங்காக் வீதிகள் வழியாக ஞாயிற்றுக்கிழமை ஊர்வலம் சென்றார்.
கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் மன்னரது ஊர்வலத்தைக் காண்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வீதிகளில் காத்திருந்தனர்.
சக்ரி வம்சத்தின் 9-ஆவது மன்னராக பூமிபல அதுல்யதேஜ் முடிசூட்டிக்கொண்ட 69 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போதுதான் முதல்முறையாக மன்னர் முடிசூட்டு விழா நடைபெறுவதால், அதனை பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.