காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது சுமார் 50 ஏவுகணைகள் வீசி சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
எனினும், அந்த ஏவுகணைகளில் பெரும்பாலானவற்றை, இடைமறி ஏவுகணைகள் மூலம் அழித்து விட்டதாகவும், தாக்குதலுக்குப் பதிலடியாக காஸா பகுதியிலுள்ள இரு ஏவுதளங்களை குண்டு வீசி தகர்த்ததாகவும் ராணுவம் தெரிவித்தது.
காஸா எல்லையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்குப் பிறகு அந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.