வங்கதேசம்: அவதூறு வழக்குகளில் கலீதா ஜியாவுக்கு 6 மாத ஜாமீன்

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு,  அவதூறு வழக்குகளில், 6 மாதங்கள் ஜாமீன் வழங்கி டாக்கா உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
வங்கதேசம்: அவதூறு வழக்குகளில் கலீதா ஜியாவுக்கு 6 மாத ஜாமீன்


வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு,  அவதூறு வழக்குகளில், 6 மாதங்கள் ஜாமீன் வழங்கி டாக்கா உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
பல்வேறு வழக்குகளில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கலீதா ஜியா, முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாக கடந்த 2014-ஆம் ஆண்டிலும், தேசத் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானை அவமதித்ததாக 2016-ஆம் ஆண்டிலும் வழக்குத் தொடரப்பட்டது.
அந்த வழக்குகளை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிமன்ற அமர்வு, அவருக்கு 6 மாத ஜாமீன் வழங்கியது. எனினும், மற்ற இரு வழக்குகளில்  மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் சிறையிலிருந்து உடனடியாக விடுவிக்கப்படமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com