பயங்கரவாதிகள் - ராணுவம் மோதல்: சிரியாவில் 45 பேர் பலி

சிரியாவில் பயங்கரவாதிகளுக்கும், அரசுப் படையினருக்கும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சண்டையில் 45 பேர் உயிரிழந்தனர்.
பயங்கரவாதிகள் - ராணுவம் மோதல்: சிரியாவில் 45 பேர் பலி


சிரியாவில் பயங்கரவாதிகளுக்கும், அரசுப் படையினருக்கும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சண்டையில் 45 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் கூறியதாவது:
சிரியாவின் வடமேற்கே உள்ள ஹமா மாகாணத்தில், அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள ராணுவ நிலைகள் மீது தெஹ்ரீர் அல்-ஷாம் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தினர்.
அப்போது நடைபெற்ற சண்டையில் அரசுப் படையைச் சேர்ந்த 14 வீரர்கள் உயிரிழந்தனர்; 31 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ராணுவ நிலைகளைக் கைப்பற்றும் தெஹ்ரீர் அல்-ஷாம் பயங்கரவாதிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டது என்றார் அவர்.
இந்தத் தகவலை, சிரியா அரசுச் செய்தி நிறுவனமான சனாவும் உறுதி செய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com