தகுதி அடிப்படையில் குடியுரிமை: 57%-ஆக அதிகரிக்க அமெரிக்கா பரிசீலனை

தகுதி அடிப்படையில் குடியுரிமை: 57%-ஆக அதிகரிக்க அமெரிக்கா பரிசீலனை

அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு தகுதி அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படுவதை 57 சதவீதமாக அதிகரிப்பது குறித்து அந்த நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது.

அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு தகுதி அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படுவதை 57 சதவீதமாக அதிகரிப்பது குறித்து அந்த நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து அதிபர் டிரம்ப்பின் முதுநிலை ஆலோசகரும், மருமகனுமான ஜாரெட் குஷ்னெர் கூறியதாவது:
தற்போது அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்படுபவர்களில் 12 சதவீத்தினர் மட்டுமே தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இந்த விகிதத்தை 57 சதவீதமாக உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். மேலும், அவர்களில் பாதி பேரை அவர்களது குடும்ப சூழல் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் தேர்வு செய்வது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.
அவ்வாறு செய்வதால், ஏராளமாக வரி செலுத்தும் நபர்கள் அமெரிக்க சமூகத்தில் இணைவார்கள் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com