ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் நகரை அடுத்த தருலமன் எனும் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் சனிக்கிழமை இரவு 10:40 மணியளவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது.
இதில் சிக்கி 63 பேர் உயிரிழந்தனர், 180 பேர் காயமடைந்தனர். தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்காலம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருமண விழாவில் நடைபெற்ற இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.