அஷ்டவர்க்க கணிதப்படி நவகிரகங்களில் ஏழு கிரகங்களுக்கு (அதாவது ராகு கேது பகவான்களைத் தவிர்த்து) பரல்கள் மூலம் சுப /அசு பபலன்களை அறியலாம்.
அவைகளாவன:
சூரிய பகவான் 4 பரல்கள்,
சந்திரபகவான் 4 பரல்கள்,
புத பகவான் 6 பரல்கள்,
சுக்கிர பகவான் 5 பரல்கள்,
செவ்வாய் பகவான் 4 பரல்கள்,
குரு பகவான் 5 பரல்கள்,
சனி பகவான் 1 பரல்.
மேலும் ராசிச் சக்கரத்தில் சர்வாஷ்டக பரல்கள் மொத்தமாக 12 ராசிகளுக்கும் 337 என்று கொடுக்கப்பட்டுள்ளது.
லக்னத்திலிருந்து கேந்திர மற்றும் திரிகோண வீடுகளின் ( 1, 5, 9, 4, 7, 10) மொத்தப் பரல்கள் குறைந்தது 168 என்று இருக்க வேண்டும்; அதாவது 12 ராசிகளின் கூட்டுத் தொகையான 337 ஐ , 2 ஆல் வகுப்பதால் கிடைப்பது.
அதேபோல் மறைவு ஸ்தானங்களின்( 3,6,8,12) மொத்த மதிப்பு 112 - ஐ தாண்டக்கூடாது. அதாவது 12 ராசிகளின் கூட்டுத் தொகையான 337 ஐ,மூன்றால் வகுத்தால் கிடைப்பது.
மேற்கூறிய சுப, அசுப வீடுகளின் பரல்களைக் கருத்திற்கொண்டு,பூர்வீக இடத்தில் வசிப்பதா,மாற்றுவதா, விற்பனை செய்வதா என்பதையும்;செய்தொழிலில் ஏற்பட்டுள்ள முடக்கம் தீருமா?தீராதா ?வேறு தொழில் செய்யலாமா ?
மேலும் வேலைக்கு செல்லலாமா என்பதையும், வாழ்க்கையில் ஏற்படும் விரயங்கள் சுப /அசுப விரயங்களா என்பதையும் அறிய முடியும்.