காஞ்சிபுரம் மாவட்டம், எழுச்சூர் அருள்மிகு தெய்வநாயகி உடனுறை நல்லிணக்ககேஸ்வரர் திருக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மார்ச் 11 வியாழக்கிழமை இரவு நான்கு கால அபிஷேக, ஆராதனையுடன் வழிபாடு நடைபெறுகிறது. நேரம்: மாலை 6 மணி - இரவு 9 மணி, நள்ளிரவு 12 மணி, மறுநாள் அதிகாலை 4 மணி. மேலும் தகவல்களுக்கு: 9600122162 / 9710195791.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம் ஏகனாம்பேட்டை ( மதுரா) நவாஸ்பேட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு செல்வநாயகி உடனுறை நவநிதீஸ்வரர் திருக்கோயிலில் மார்ச் 11 -ஆம் தேதி மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மகா சிவராத்திரி சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
அன்றைய தினம் தனியொரு லிங்கத்திற்கும், உற்சவ பெருமானுக்கும் பொதுமக்கள் தங்கள் கைகளினாலேயே பன்னீர் அபிஷேகம் செய்யும் பேற்றினைப் பெறலாம்.
மேலும் தகவல்களுக்கு: எஸ். சுகுமார் - 9677300562.