வெள்ளிமணி

பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர் (18/06/2021)

DIN

* பராத்பரனே, ஸ்ரீ ராமச்சந்திரா! எத்தனையோ துணைகளுடன் நீ என்னைப் படைத்திருக்கிறாய். இருந்தாலும், எல்லாவற்றிற்கும் மூலகாரணமான உன்னைத்தான் நான் ஒவ்வொன்றுக்கும் நாடி நிற்கிறேன். என்னை நீ ரட்சித்தருள வேண்டும். 
-மகான் ஸ்ரீ தியாகராஜர்
* ஆத்மாவே எல்லா உயிரினங்களாகவும் ஆகியிருக்கிறது. (இதை உணர்ந்து இறைவனை) ஒருமையுணர்வைப் பெறுகின்ற ஒருவனுக்கு என்ன மனமயக்கம்? என்ன கவலை? (அவனுக்கு மனமயக்கமும் கவலையும் இல்லை).
-ஈசாவாஸ்ய உபநிஷதம் -7 
* பார்த்தவைகளும் கேட்டவைகளுமாகிய விஷயங்களில் இருக்கும் நாட்டத்தை ஒழித்தவனுக்கு, உலகப் பற்றின்மை உண்டாகிறது.
-பதஞ்சலி யோக சூத்திரம், சமாதி பாதம் -15
* தவம் செய்யாதவர்க்குத் தேவர்கள் வரம் தர மாட்டார்கள். 
-சிலப்பதிகாரம்
* நெருப்பை நீரினால் அணைக்கிறோம். அதுபோல், எழுகின்ற கோபத்தை அறிவால் அடக்குபவர்களே மனிதர்களில் சிறந்த மகாத்மாக்கள்.
-வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம் -55.3
* பரம்பொருளே! உன்னில் நான் இணைவேனாக. என்னில் நீ இணைவாயாக. ஆயிரம் கிளைகளுடன் (வளர்ந்திருக்கின்ற மரம்போல் எங்கும்) பரந்திருக்கும் உன்னில் இணைவதன்
மூலம் நான் புனிதம் பெறுவேனாக.
-தைத்திரீய உபநிஷதம் - 1.4.5
* செல்வத்தை மனிதன் வரமாகக் கருதுகிறான். ஆனால், பணத்தால் மனத்தூய்மை குறையத் தொடங்குகிறது.
-ராமகீதை (ஸ்ரீ ராமருக்கு அவரது குரு வசிஷ்டர் கூறிய அறிவுரை)
* உண்மையான தனது நிலையை அறிந்தவன், வாழ்க்கையின் உன்னத குறிக்கோள்களை நோக்கி பணியாற்றுவதிலிருந்து வேறு எதனாலும் கவனம் திரும்பாதவன், தர்மத்தைக் கடைப்பிடிக்கும் உறுதி உள்ளவன் இத்தகைய மனிதன் உண்மையாகவே பண்டிதன் ஆவான். 
-விதுரநீதி
* தயவு இல்லாமல் அறம் ஏது? எல்லா உயிர்களிடமும் தயவு இருக்க வேண்டும். தயவுதான் தர்மத்தின் மூலமாகும். தயவு இல்லாதவனை சிவபெருமான் விரும்பமாட்டான். 
-பசவண்ணர் (கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்த மகான்) 
* செல்வம் உடையவர்களைக் காட்டிலும் தவம் உடையவர்கள்தான் - உயர்ந்த கல்வியறிவு உடையவர்கள்தான் - உலக மக்களால் பின்பற்றத்தக்கவர் ஆவர்.
-குமரகுருபரர்
* பால் கறவை அற்றுப் போன ஒரு மலட்டுப் பசு மாட்டை வைத்திருப்பதில் என்ன உபயோகம்? அதே மாதிரி உயர்ந்த கல்வியும், தெய்வபக்தியும் இல்லாத ஒரு மகன் பிறந்தால் என்ன பிரயோஜனம்? 
-சாணக்கிய நீதி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

கவிஞர் தமிழ்ஒளி!

SCROLL FOR NEXT