ஆத்மா ஒன்றே உண்மையில் எல்லாமாக நிற்கிறது. ஆதலால், "இந்தப் பிரபஞ்சம் என்னும் எல்லாப் பொருள்களும் வெறும் தோற்றமே' என்னும் தெளிவைப் பெற வேண்டும்.
-ஆதிசங்கரர் (úஸôபான பஞ்சகம்)
உலகில் ஒருவன் சாத்துவிக இயல்போடு நடந்துகொண்டால், "அவனைச் சக்தியற்றவன்' என்றே சாமான்ய மக்கள் நினைத்துவிடுகிறார்கள். அவர்கள் அவனை அலட்சியமே செய்வார்கள்.
அதனால் உலகத்தில் காரியம் நடக்க வேண்டுமானால், அதிகார தோரணையைக் காட்டிக் கொஞ்சம் கடுமையாகவும் இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
-வால்மீகி ராமாயணம்
பிறப்பாலும் தொழிலாலும் வர்ணாசிரமங்களாலும், ஜாதியாலும் ஒருவனுக்கு இந்த உடலில், "நான்' என்ற எண்ணம் உண்டாகாமல் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவனே விஷ்ணுவுக்குப்பிரியமானவன்.
-சுருதி கீதை
""எல்லாவற்றையும் படைத்துக் காத்து ஒடுக்கி, ஒடுக்கியபடியே மீண்டும் படைப்பவர் சிவபெருமான். அவர் பக்குவம் அடைந்த ஆன்மாக்களுக்கு அருளி ஆட்கொள்ளும் தலைவராக விளங்குகிறார். அவர் முதலும் முடிவும் இல்லாதவராக விளங்குகிறார்'' என்று வேதச் சாகைகள் (பிரிவுகள்) எடுத்துக் கூறுகின்றன.
-கந்த புராணம்
மகன் மீது எப்போதும் அன்பு கொண்டு, அவனுக்கு வேண்டியவற்றைத் தருவதையே தன் விருப்பமாகக் கொண்டவள் தாய். அதுபோல் உயிர்கள் மீது கருணைகொண்ட தயாபரனாக இறைவன் விளங்குகிறான்.
-அருணகிரிநாதர்
உலகத்தில் சிற்றினத்தார் வாழ்க்கைக்கும் சீரடியார் வாழ்க்கைக்கும் வேறுபாடு உண்டு; சிற்றினத்தார் வெறும் உலகியல் ஆசையிலேயே உழல்பவர்கள்; சீரடியார் இறைவனது பற்றிலேயே காலத்தைக் கழிப்பவர்கள்.
-பட்டினத்தார்
தாய் தந்தைக்குப் பணிவிடை செய்பவர்கள், பசித்தவர்களுக்கு உணவு தருபவர்கள், தோப்பு கிணறு தண்ணீர் பந்தல் நிறுவுகிறவர்கள் ஆகியவர்கள் சொர்க்கம் செல்கிறார்கள்.
-மகாபாரதத்தில் பீஷ்மர்
கலியுகத்திற்கு நாரதர் காட்டிய பக்திநெறியே சிறந்தது. இறைவனின் திருநாமத்தையும் மகிமையையும் பாடுவதையும், ""எம்பெருமானே, எனக்கு ஞானத்தைக் கொடுங்கள், எனக்குப் பக்தியைக் கொடுங்கள், எனக்கு உன் காட்சியைக் கொடுங்கள்'' என்று மனம் உருகி பிரார்த்தனை செய்வதையும் செய்ய வேண்டும்.
-பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்
உலகப் பொருள்களால் பெறப்படும் விஷய சுகம் சுகமல்ல; யதார்த்த சாந்தியே சுகஸ்வரூபம்.
தீட்டுவதால் கத்திமுனை கூர்மை அடைவது போல, அப்பியாசத்தால் மனம் மேன்மேலும் சூட்சுமமாகிறது. அத்தகைய மனம் அந்தர்முகத்திலும் பகிர்முகத்திலும்கூட முன்பைவிட நன்றாக வேலை செய்யும்.
ஞானம், பக்தி, யோகம் என்னும் மூன்று வழிகளிலும்கூட எந்தக் காரணத்தாலோ ஒருவனின் மனம் ஈடுபடாவிட்டால், கர்மயோக மார்க்கத்தை அவன் அனுசரிக்கலாம். அதனால் சத்துவகுணத் தெளிவு பெற்று குறுகிய சுயநலமற்ற அமைதியை அடையலாம்; உள்ளம் விசாலமாகிய நிலையில் ஞானம், பக்தி, யோக மார்க்கங்களைப் பின்பற்றலாம்; அல்லது நன்கு அனுஷ்டிக்கப்படும் கர்மயோகம் ஒன்றினாலேயேகூட உள்ள மலர்ச்சி தானாகவே உண்டாகலாம்.
-ஸ்ரீ ரமண மகரிஷி
ஆத்மாவை (கத்தியால்) வெட்ட முடியாது, (நெருப்பால்) எரிக்க முடியாது, (நீரால்) நனைக்க முடியாது, (காற்றால்) உலர்த்தவும் முடியாது. இது எங்கும் நிறைந்தது, என்றென்றும் இருப்பது, நிலையானது, அசைவற்றது, புராதனமானது.
-பகவத்கீதை 2-24