வெள்ளிமணி

பலன் தரும் பரிகாரத் தலங்கள்

ஆர்.விஜயலட்சுமி


கரூர் அருகே உள்ள நெரூர் அக்னீஸ்வரர் கோயிலில் சதாசிவ பிரும்மேந்திரர் ஜீவசமாதி உள்ளது. சூரபத்மனைக் கொன்ற தோஷத்தை நீக்க முருகப்பெருமான் வழிபட்ட தலம் என்பது ஐதீகம். இங்குள்ள அக்னீஸ்வரரை வணங்கினால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ளது திருநாரையூர். இங்கு திரிபுரசுந்தரி சமேத சுந்தரேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இங்குள்ள பொல்லாப்பிள்ளையார் உளியால் செதுக்கப்படாமல் சுயம்புவாகத் தோன்றியவர். இவரை வேண்டிக் கொண்டால் வெளிநாடு செல்வதில் உள்ள தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் உள்ளதைப்போல விநாயகருக்கும் உண்டு. அதில் முதன்மையானது திருநாரையூர். மற்ற ஐந்து தலங்கள்: திருவண்ணாமலை, திருமுதுகுன்றம், திருக்கடவூர், மதுரை, காசி ஆகியவை
யாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT