"சுப்பிரமணிய ஸ்தோத்திரம் ஆறு எழுத்து மந்திரமாகும். அதை எவன் எப்போதும் படிக்கிறானோ, அவன் விரும்புவதற்கும் அதிகமாக அவனது எண்ணங்கள் நிறைவேறுகின்றன.
-குமாரதந்திரம் (ஸ்ரீ சுப்ரமண்ய மூல மந்திரஸ்தவம்)
"கல்வியை விரும்புபவன் கல்வியையும், செல்வத்தை விரும்புபவன் செல்வத்தையும், மகப்பேறு விரும்புபவன் மகப்பேற்றையும், முக்தியை நாடுபவன் முக்தியையும் அடைவார்கள்.
-ஸ்ரீ நாரத புராணம் (சங்கஷ்டநாசன கணேச ஸ்தோத்திரம்)
"பிரம்மம்தான் ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் என்ற பஞ்ச பூதங்களாக இருக்கிறது. -பிரச்ன உபநிஷதம்
"சிறிய பொருளையும் இகழாதே, சிறிய பொருளையும் அவமதிக்காதே. உன் வலக் கையில் செயல்திறமை இருக்கிறது; உன் இடக் கையில் வெற்றி இருக்கிறது. -அதர்வ வேதம்
"ஸ்ரீ ராமர் சொன்னது: நீ உன்னை சம்சாரத்திலிருந்து விடுவித்துக்கொள்ளும் விருப்பமுடையவன். ஆதலால் நீ என்னுடைய உண்மையான சொரூபத்தை நன்கு அறிவதற்காக, உடனே வேதாந்தங்களைக் கற்பதில் ஈடுபட வேண்டும். -ஸ்ரீ ராம கீதை
"மனதை அடக்கி உள்ளத்தை ஒருமுகப்படுத்துவது, வேதம் ஓதுவதற்கும் வேள்வி செய்வதற்கும் சமமானது. -வேதாந்த தீபம்
"ஜீவராசிகள் அனைத்தையும் பாதுகாப்பதும், தீயசக்திகளை நாசம் செய்வதும் கருணை எனப்படும். -மகான் துக்காராம்