நிகழ்வுகள்

காஞ்சி மாவட்டம் அச்சிறுபாக்கம் - எலப்பாக்கம் செல்லும் வழியில் உள்ளது விளாங்காடு கிராமம் .

ஜேஷ்டாபிஷேகம்
 காஞ்சி மாவட்டம் அச்சிறுபாக்கம் - எலப்பாக்கம் செல்லும் வழியில் உள்ளது விளாங்காடு கிராமம் . இங்குள்ள 1200 பழைமையான அருள்மிகு ஆதிமூல நாராயணப் பெருமாள் கோயிலில் கடந்த 2014 -ஆம் ஆண்டு மகா சம்ப்ரோக்ஷண வைபவம் நடந்தேறியது. தற்போது 5 ஆண்டுகள் பூர்த்தியாகி, ஜூலை 14 -ஆம் தேதி ஜேஷ்டாபிஷேகம் நடைபெறுகிறது. அன்று, சிறப்பு திருமஞ்சனம், கலசாபிஷேகம், அன்னதானம் நடைபெறும். இக்கோயிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீஆதிமூல நாராயணப் பெருமாள் சுயம்புவாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர் என்கிற பெருமை வாய்ந்தவர்.
 தொடர்புக்கு: 98842 51427.
முப்பெரும் இசை விழா
 சென்னை, மயிலாப்பூர் மியூசிக் அகாதெமி மினி ஹாலில் ஸ்ரீ நாதமுனிகளின் 1195 -ஆம் ஆண்டு திருஅவதார தினவிழா, ஸ்ரீமான் அல்லூரி வெங்கடாத்ரி சுவாமிகள் இசை விழா, ஸ்ரீமான் எம். என். வெங்கடவரதன் இசை விழா ஆகிய முப்பெரும் இசை விழா கொண்டாட்டங்கள், ஜூலை 14 -ஆம் தேதி, காலை 10.00 மணி முதல் தொடங்கி நடைபெறுகின்றது.
 தொடர்புக்கு: 87544 66164.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com