ஆற்றங்கரை அற்புதர்!

மகாராஷ்டிரத்தில் ஒரு கிராமத்தில் வசித்து வந்தனர் சுப்புபட்டர் - கங்காபாய். பெரும் தனவான்களாக இருந்தபோதிலும் அவர்களுக்கு மழலை பாக்கியம் அமையவில்லை.
ஆற்றங்கரை அற்புதர்!

மகாராஷ்டிரத்தில் ஒரு கிராமத்தில் வசித்து வந்தனர் சுப்புபட்டர் - கங்காபாய். பெரும் தனவான்களாக இருந்தபோதிலும் அவர்களுக்கு மழலை பாக்கியம் அமையவில்லை. அதற்காக தினமும் ஸ்ரீராமசந்திர மூர்த்தியை மனமுருக வேண்டிவந்தனர்.
 ஒரு நாள் அவர்கள் கனவில் ஸ்ரீராமபிரானே தோன்றி அவ்வூருக்கு வரும் சுவாமிகளை (துறவி) இல்லத்திற்கு பிûக்ஷ ஏற்க அழைக்குமாறும், அதன் பயனாய் அவர்களது பிரார்த்தனை நிறைவேறும் என்றும் அருளினார். அவ்வமயம், அவ்வூருக்கு விஜயம் செய்த உத்ராதிமட பீடாதிபதி ஸ்ரீரகுவர்ய தீர்த்தரை தம்பதிகள் சந்தித்து தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர். தன்னை அணுகிய செல்வந்தரிடம் "உமக்கு பிள்ளை இல்லாததால் உம் வீட்டில் பிûக்ஷ எடுக்க இயலாது" என்றார் மடாதிபதி. மனம் வருந்திய தம்பதியினர் ஸ்ரீராமபிரான் தங்கள் கனவில் வந்ததைத் தெரிவிக்க, மடாதிபதியும் தனக்கு பின் மடத்தை நிர்வகிக்க தகுந்த ஒரு நபரை காட்டும்படி ஸ்ரீமத்வரிடமும், ஸ்ரீராமபிரானிடமும் பிரார்த்திக் கொண்டது நினைவுக்கு வர, தனக்கு இறைவன் இட்ட கட்டளையாகவும் எண்ணி தம்பதியிடம் "உங்களுக்கு பிறக்கப் போகும் முதல் மகவை ஸ்ரீமடத்திற்கு தந்துவிட வேண்டும், அப்படியென்றால் பிûக்ஷயை ஏற்றுக்கொள்கிறேன்" என்றார் மடாதிபதி. மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டார் அந்த செல்வந்தர்.
 ஒரு நன்னாளில், ஸ்ரீ ஹரியின் அருளாசியுடன் ஓர் ஆண் மகவை செல்வந்தரின் மனைவி பெற்றெடுத்தாள். ஏற்கெனவே, மடாதிபதி விதித்திருந்த நிபந்தனையின்படி பிறந்த குழந்தை பூஸ்பரிசம் தங்கத் தாம்பளத்தில் வைக்கப்பட்டு மடத்தில் ஒப்படைக்கப்பட்டது. குழந்தை மடத்தில் நித்ய ஆராதனை பூஜை செய்த அபிஷேகப் பாலையே அருந்தி வளர்ந்து வந்தது. இறையருளால் பிறந்த அந்த குழந்தையின் மகத்துவம், பாலபருவத்திலேயே தெரியவர ஆரம்பித்தது. இளம் பாலகனுக்கு ஏழு வயதில் முறைப்படி உபயநயனம் செய்வித்து, எட்டாவது வயதில் ரகூத்தம தீர்த்தர் எனும் நாமத்தை அளித்து சன்னியாசம் அளித்தார் ஸ்ரீரகுவர்யதீர்த்தர்.
 தனது குரு பிருந்தாவனஸ்தரான பிறகு மடத்தின் முழு பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார் ரகூத்தமர். இளம் வயதில் இருந்த ரகூத்தமருக்கு, மடத்துபண்டிதர் சற்று அலட்சிய மனோபாவத்துடன் மாத்வ பாடங்களை அவருக்கு சரியாக போதிக்கவில்லை. இதற்காக வருத்தப்பட்ட ரகூத்தமரின் கனவில் ஒரு நாள் ஸ்ரீ ஹரியே அவரது குரு உருவில் வந்து அனைத்து கலைகளும் பயிலாமலேயே அவருக்கு கிடைக்குமாறு அருளினார். (நாவில் பீஜாட்சரம், எழுதியதாகவும் சொல்வது உண்டு) அது முதல் ரகூத்தமர் தாமாகவே சகல மாத்வ சாஸ்திரங்களையும் குறித்துப் பேசலானார். இவரின் பேச்சில் வசீகரமும் இருந்தது.
 எல்லோரையும் இறைவன் பால் திருப்பி ஆன்மிகத்தை தழைக்கச் செய்தார் ரகூத்தம சுவாமிகள். இவர் இயற்றிய கிரந்தங்கள் பல. மாத்வ குருமார்கள் ஸ்ரீமத் வாச்சாரியர் மற்றும் ஜெயதீர்த்த சுவாமிகள் செய்தருளிய கிரந்தங்களில் மறைந்துள்ள தத்துவார்த்தங்களையும், சித்தாந்தங்களையும், விளக்கும் விதத்தில் ஐந்து அரிய நூல்களை இயற்றினார். இச்செயல் மிகச் சிறந்த சாதனையாக கருதப்பட்டு ஸ்ரீரகூத்தமர் "பாவபோதகாரர்" என அழைக்கப்பட்டார்.
 சுமார் 38 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்த ஸ்ரீ ரகூத்தமர் தென்னகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் பஞ்சகிருஷ்ணாரண்ய úக்ஷத்ரத்தில் ஒன்றான திருக்கோயிலூருக்கு சமீபத்தில் உள்ள மணம்பூண்டி கிராமத்தில் தக்ஷிண பினாகினி நதிக்கரையில் வாசம் செய்து, இறுதியில் அங்கேயே பிருந்தாவனவாசி ஆனார். (அவரது ஆக்ஞைப்படி பிருந்தாவனம் மேற்கூரையின்றி வெட்ட வெளியில் உள்ளது சிறப்பு). இவர் பீடாதிபதியாய் இருந்த போது இறை தொண்டுடன், மக்களின் பிணி துயரம், ஆபத்துகள் போன்றவற்றிலிருந்து காப்பாற்றும் பணியையும் செய்து வந்தார். இவரிடம் மந்திர தீட்சைப்பெற்று பலனடைந்தவர் ஏராளம். தனக்கு வாய்க்கப்பட்ட மந்திர சக்திகளை மக்களின் நலனுக்காகவே பயன்படுத்தி கணக்கற்ற அற்புதங்கள் நிகழ்த்தினார். இன்றும் இவரது பிருந்தாவனம், வருபவர்களுக்கு அதிசயப்படும் விதத்தில் காரியங்கள் சித்திடைகின்றன.
 ஸ்ரீ ஸ்ரீ 1008 ஸ்ரீரகூத்தம தீர்த்த ஸ்ரீபாதங்களவர்களின் 446-ஆவது ஆண்டு ஆராதனை மகோத்சவம் ஜனவரி 16 (புஷ்யசுத்த தசமி) , ஜனவரி 17 (ஏகாதசி), ஜனவரி - 18, (துவாதசி), ஜனவரி 19 (திரயோதசி) ஆகிய தேதிகளில் அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, பாவபோத பாராயணம், ப்ரவசனம், ரதோத்ஸவம், மூலராமதேவர் மகாபூஜை, பஜனை இசை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெறுகின்றது.
 தொடர்புக்கு: 94428 65395.
 - எஸ்.வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com