அல்லவை செய்குப, அல்லாப்பின், அல்லாக்கால்,
செல்வது அறிகிலர் ஆகிச் சிதைத்து எழுவர் -
கல்லாக் கயவர் இயற்கை - நரியிற்கு ஊண்
நல் யாண்டும் தீ யாண்டும் இல். (பாடல்: 290)
நரிக்கு உணவு உண்பதில் நல்ல காலம், கெட்ட காலம் என்ற வேறுபாடு இருப்பது இல்லை. என்றும் அது வஞ்சக நரியாகவே வாழும். நரியைப் போலவே பண்புகளைக் கற்றுக் கொள்ளாத கயவர் வறுமை உள்ள காலத்தும் தீமை செய்வர். வளமை உள்ள காலத்தும் தீமை செய்வர். நல்ல வழியே அறியார்.