அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன்
பிறிதினால் மாண்டது எவனாம்? - பொறியின்
மணி பொன்னும், சாந்தமும், மாலையும், மற்று இன்ன
அணி எல்லாம், ஆடையின் பின்.
(பாடல்: 271)
கற்றறிந்த கேள்வி அறிவால் சிறப்புகளை எய்தாத ஒருவன் வேறுவகையில் என்ன சிறப்பை எய்த முடியும்? கட்டாயம் அணிய வேண்டிய ஆடைகளுக்கு மேலாகக் கருவிகளால் ஒளி ஊட்டப்பட்ட இரத்தினம், தங்கம், சந்தனம், மலர்மாலைகள் முதலியவற்றால் ஆன அணிகலன்களை அணிந்துகொள்வதால் பயன் என்ன இருக்க முடியும்?