தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

20th Jun 2021 09:32 PM

ADVERTISEMENT

 


அறிவன்று அழகன்று அறிவதூஉம் அன்று
சிறியர் எனப்பாடும் செய்யும் - எறிதிரை
சென்றுலாம் சேர்ப்ப! குழுவத்தார் மேயிருந்த
என்றூடு அறுப்பினும் மன்று. (பாடல்-207) 


காற்றினாலே மோதி எறியப்படும் அலைகள் கரைமேற் சென்று உலவிக் கொண்டிருக்கும் கடற்கரைகளுக்கு உரிய தலைவனே! சூரியனையே ஊடறுத்துச் சென்றாலும் செல்லலாம். ஆனால், அறிஞர்கள் கூடியிருக்கிற அவையை ஊடறுத்துப் போகவே கூடாது. அப்படிப் போவது அறிவுடைமையும் அன்று; பிறந்த குடிக்கு அழகும் அன்று;  அறநெறியின்பாற் பட்டதும் அன்று. கீழ்மக்கள் என்று சொல்லப்படுகின்ற சொல்லையே அது கொண்டு வரும். "குழுவத்தார் மேயிருந்த என்றூடு அறுப்பினும் மன்று' என்பது பழமொழி.

ADVERTISEMENT
ADVERTISEMENT