தமிழ்மணி

பழமொழி நானூறு

22nd Mar 2020 06:37 AM

ADVERTISEMENT


நாணார் பரியார் நயனில செய்தொழுகும்
பேணா அறிவிலா மாக்களைப் பேணி 
ஒழுக்கி அவரோ டுடனுறை செய்தல்
புழுப்பெய்து புண்பொதியு மாறு. (பாடல்-142 )


நாணத்தக்கனவற்றிற்கு நாணாராய் நன்மையில்லாத செயல்களைச் செய்து ஒழுகுகின்ற, யாவரானும் விரும்பப்படாத அறிவு இல்லாத விலங்கு ஒப்பாரை, விரும்பி நடத்தி,  அவருடன் கூடி வாழ்தலைச் செய்தல்,  புழுவினை உள்ளே இட்டுப் புண்ணை மூடிவைத்ததோடு ஒக்கும். (க-து.) தீயாரோடு உடனுறையின் தீமையே விளையும்.  "புழுப் பெய்து புண் பொதியுமாறு' என்பது பழமொழி.

ADVERTISEMENT
ADVERTISEMENT