சான்றோர்தம் நட்பு

பொருந்திய அன்பினை உடைய உமையை ஒரு கூறாக, தண்டினையும் வெல்லுகின்ற ஏற்றுக்கொடியினையும் உடைய சிவபிரான்
 சான்றோர்தம் நட்பு

பழமொழி நானூறு
ஒட்டிய காதல் உமையாள் ஒருபாலாக்
 கட்டங்கம் வெல்கொடி கொண்டானும் கொண்டானேவிட்டாங் ககலா முழுமெய்யும் கொள்பவே
 நட்டாரை ஒட்டி யுழி. (பா-85)
 பொருந்திய அன்பினை உடைய உமையை ஒரு கூறாக, தண்டினையும் வெல்லுகின்ற ஏற்றுக்கொடியினையும் உடைய சிவபிரான் ஏற்றுக்கொண்டான். தம்மொடு நட்புச் செய்தாரைத் தாம் அடைந்தவிடத்து, அங்கே விட்டு நீங்காத தம் உடம்புமுழுதும் கொள்வார்கள். (க-து.) நல்லோர் தம் நட்பினரிடத்துத் தாம் வேறு, அவர் வேறு என்னும் வேறுபாடின்றி ஒழுகுவர். "ஒட்டிய காதல் உமையாள் ஒருபாலாக் கட்டங்கம் வெல்கொடி கொண்டானும் கொண்டான்' என்பது பழமொழி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com