பிளாஸ்டிக் நாற்காலிகள், முக்காலிகளின் உட்காரும் பகுதியின் நடுவில் வட்ட வடிவ ஓட்டை ஒன்று இருப்பதைப் பார்க்கிறோம். இதற்குக் காரணம் என்ன?
எல்லாம் நல்ல ஒரு முக்கிய காரணத்துக்காகத்தான். நாம் நாற்காலியில் உட்காரும்போது, அதிலிருக்கும் காற்று வெளியேறுவதால் ஒரு வெற்றிடம் உருவாகும். அந்த வெற்றிடத்தை நமது உடல் நிரப்புகிறது. இந்த ஓட்டை இல்லாவிட்டால் உடலின் அழுத்தத்தினால் நாற்காலியின் கால்கள் விரிவடைந்து அதனுடைய "பேலன்ஸ்' தவறக்கூடும். அதனால் கால்கள் உடைவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதைத் தவிர்ப்பதற்குக்தான் இந்த ஓட்டை.
இதையும் படிக்க : அங்கிள் ஆன்டெனா: ரயில் ஜன்னல்களில் இருக்கும் கம்பிகள் ஏன் செங்குத்தாக இல்லாமல் கிடைமட்டமாக பொருத்தப்பட்டிருக்கிறது?
இந்த ஓட்டையினால் கீழிருந்து காற்று உள்ளே வருவதால், நமது எடையினால் நாம் சரியாக உட்கார முடிகிறது. இவை தயாரிக்கப்பட்டு அடுக்கி வைக்கப்படும்போது ஓட்டை இல்லாவிட்டால் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிய பிறகு மீண்டும் அவற்றை ஒவ்வொன்றாகப் பிரிப்பது மிகவும் கடினமாகிவிடும்.