வாரணாசி இந்து கல்லூரியில் பாரதியார் படித்துகொண்டிருக்கும்போது, அடிக்கடி மீசையை வழித்து விடுவார். இதைக் கண்ட மற்ற மாணவர்கள், "" எங்கள் வீட்டில் யாராவது இறந்தால் மட்டுமே நாங்கள் மீசையை மழித்துக் கொள்வோம். அப்படியென்றால் உங்கள் வீட்டில் யாரும் அடிக்கடி இறந்துவிடுகிறார்களா?'' என்றனர். அப்போதிலிருந்து இறக்கும்வரை பாரதியார் மீசையை மழிக்கவில்லை.