சிறுவர்மணி

பொன்மொழிகள்

வி.ந.ஸ்ரீதரன்

வாழ்க்கைப் பந்தயத்தில் ஓடிக் கொண்டே இருந்தால்தான் ஓரிடத்தில் நிற்க முடியும்.

மகிழ்ச்சி தேடி வர வேண்டும். வெற்றியை  தேடி பெற வேண்டும்.

சுருதி சேராத பாட்டும் உறுதி இல்லாத உள்ளமும் பயனற்றுப் போகும்.

அழுகை மகிழ்ச்சியைத் தருவது குழந்தை பிறக்கும்போது மட்டுமே!

நாமாகத் தேடும் உறவு நட்பு. தானாகத் தேடிவரும் நட்பு உறவு.

கால்பந்து விளையாட்டில் கோல்கள் போட கால்கள் வேண்டும். கோலைத் தடுக்க கைகள் வேண்டும்.

வெற்றியை மட்டுமே எதிர்பார்ப்பவன் தோல்வியை அடைவான்.

ஒத்திகை இல்லாத நாடகம் வாழ்க்கை நாடகம்தான்.

உப்பு கரிக்கத்தான் செய்யும். உண்மை கசக்கத்தான் செய்யும்.

வம்பு பேச விஷயம் தேவை இல்லை. விஷயம் உள்ளவன் வம்பு பேசுவதில்லை.

பலத்த புயலில் கனத்த மரமும் வீழ்ந்துவிடும். துணிந்த மனமும் துவண்டு விடும்.

இரைச்சல் இல்லாத சந்தையும் இன்னல் இல்லாத வாழ்க்கையும் இல்லை.

பணமும் குணமும் சேருவதில்லை. பசியும் ருசியும் சேருவதில்லை.

திருத்தப்படாத தவறுகள் வருத்தப்பட வைக்கும்.

எல்லோரும் பார்க்கிறார்கள். சிலரே கூர்ந்து பார்க்கிறார்கள். சிலரே காது கொடுத்து கேட்கிறார்கள். சிலரே மனம் திறந்து பேசுகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT