கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெறும்போது, கம்பீரமாக எழுந்து நிற்கும் ராஜகோபுரத்தில் வரகு தானியம் வைக்கப்படுகிறது. இதற்கு இடி தாங்கும் சக்தி இருக்கிறது.
பழங்காலத்தில் தமிழகத்தில் "கூபநூல்' என்று ஒரு நூல் இருந்தது. அந்த நூல் கிணறு வெட்டும் முறைகளை சிறப்பாக விளக்கும் தன்மையுடையது. இந்த இடத்தில் கிணறு வெட்டினால் நல்ல நீர் கிடைக்கும் என்று துல்லியமாக அறிய முடிந்தது. உதயணன் என்பவர் இந்த நூலில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார் என்பதை பெருங்கதை எனும் நூல் குறிப்பிடுகிறது.
இந்தியாவில் துக்கத்தை அனுசரிக்க கருப்பு நிறத்தைப் பயன்படுத்துகிறோம். ஆனால், துருக்கியில் நீல நிறத்தையும், சீனாவில் வெள்ளை நிறத்தையும், எகிப்தில் மஞ்சள் நிறத்தையும் பயன்படுத்துகின்றனர்.