கற்றோருக்கு கல்வியாக இருப்போம்!
கவிஞர்களுக்கு கற்பனையாக இருப்போம்!
உழவர்களுக்கு கலப்பையாக இருப்போம்!
ஊனமுற்றோருக்கு ஊன்றுகோலாக இருப்போம்!
கண்ணிழந்தோருக்கு விழிகளாக இருப்போம்!
கடவுளுக்கு பக்தராக இருப்போம்!
கூவி எழுப்புவதில் சேவல்களாக இருப்போம்!
கூடி வாழ்வதில் காகங்களாக இருப்போம்!
பசிக்கு உணவாக இருப்போம்!
நோய்க்கு மருந்தாக இருப்போம்!
பெரியோருக்குக் கீழ்படிபவர்களாக இருப்போம்!
பெற்றோருக்குப் பிள்ளையாக இருப்போம்!