வண்ணத்துப் பூச்சியே!
வண்ணத்துப் பூச்சியே!
என்னருகே வந்திரு..!
என்னென்ன நிறங்கள்!
உன்னை நான் தொட்டேன்!
என் விரல்களில் வண்ணங்கள்..!
உன்னை இனி தொட மாட்டேன்!
என்னையே நம்பிடு..!
உன்னைப் பிடித்திடவே!
நண்பர்களைவிட மாட்டேன்!
உன்னைக் காப்பேன் என்றே நம்பிடு என்னையே!
என் கண்ணில் நிறைந்துள்ளாய்!
என் கையில் வந்திடு!
உலக அழகெல்லாம்
உன்னிடமே உள்ளதே..!
வண்ணத்துப் பூச்சியே!
என் கையில் வந்திரு!
- கொ.மா.கோதண்டம்