ஒரு ஊருல காய்கறிகளும் பழங்களும் தனித் தனியாக வாழ்ந்தார்கள். அப்போ காய்கறி ராஜா பூசணிக்காய், பழங்கள் ராஜா பப்பாளிக்கு ஒரு தூது அனுப்பினார்.
அந்தத் தூதில் "நாங்க போருக்கு வருகிறோம்' என்று இருந்தது. ஏன் போர் தெரியுமா? ஏனென்றால், பழங்கள் காய்கறிகளைக் கொடுமைப் படுத்தினார்கள்.
பழங்கள் போருக்குக் கிளம்பினார்கள். செர்ரி பழம் ""நீங்கள் குண்டுகள் தயார் செய்ய வேண்டாம். நானே போகிறேன் குண்டாக'' என்றது. காய்கறிகள் பக்கம் முருங்கை ""நீங்கள் கத்தி எல்லாம் தயார் செய்ய வேண்டாம். நானே போகிறேன்'' என்றது. போர் ஆரம்பமானது. டெலஸ்கோப் வைத்து குட்டி காய்கறிகளும், குட்டி பழங்களும் யார் போரில் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தன. ஆனால் யாரும் ஜெயிக்கவில்லை.
சிறிது நேரத்தில் காய்கறிகள் எல்லாம் அவர்களுக்குள்ளே சண்டை போட்டுக்கொண்டு நசுங்கிவிட்டன. பழங்களும் அவர்களுக்குள்ளே சண்டை போட்டுக்கொண்டு நசுங்கிவிட்டன.
குழந்தைகளே... இக்கதை சொல்லும் நீதி என்னவா இருக்கும் என்று யோசிக்கத் தொடங்கிவிட்டீர்களா...?
(சிறுவன் ரமணா எழுதிய "நீல தேவதை' நூலிலிருந்து...)