கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் குளத்தில் மலரும் பூ ஒன்றின்
பெயர் கிடைக்கும். விடைக்குப் போகாமல் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...
1. இந்த அலைக்கு ஓய்வே இல்லை...
2. ஆணி அடிப்பதற்கு உதவும்...
3. இந்த நவீன காலத்தை பெரியவர்கள் இப்படியும் சொல்வார்கள்...
4. சுவாமி பயணிக்கும் சிறிய தேர்...
5. வெய்யில் காலத்தில் இதன் தேவை அதிகரிக்கும்...
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. கடல்அலை
2. சுத்தியல்
3. கலிகாலம்
4. சப்பரம்
5. தர்பூசணி
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : அல்லிப்பூ