பெர்னாட்ஷாவைக் காண வந்த நண்பர், ஷாவின் வீட்டைச் சுற்றிலும் ஏராளமான பூச்செடிகள் இருப்பதையும், அவை பூத்துக் குலுங்கி எழிலுடன் இருப்பதையும் கண்டார்.
உடனே, ""ஷா.. இந்தப் பூக்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன. ஆனால், உங்களுக்கு ரசனையே இல்லையே. வீட்டைச் சுற்றிலும் அழகான பூச்செடிகளை வளர்க்கும் நீங்கள் வீட்டுக்குள் வெறுமையாக வைத்திருக்கிறீர்களே! இந்த அழகான மலர்களைப் பறித்து அலங்கார ஜாடிகளில் வீட்டுக்குள் வைத்தால் எவ்வளவு அழகாக இருக்கும்! உங்களுக்குப் பூக்களைப் பிடிக்காதா?'' என்றார்.
அதற்கு பெர்னாட்ஷா, ""எனக்குக் குழந்தைகளை மிகவும் பிடிக்கும். அதற்காகக் குழந்தைகளின் கழுத்தைத் திருகி அலங்காரமாக எனது வீட்டுக்குள் வைக்க முடியுமா? செடிகளைச் சிரச்சேதம் செய்து பூக்களை ரசிப்பதைவிட, செடிகளைச் சுமங்கலிகளாகப் பூவுடன் வாழவிடுவது தான் உயர்ந்த பண்பாடு'' என எனக்குத் தோன்றுகிறது'' என்றாராம்.