சிறுவர்மணி

பாரதியார் பொன்மொழிகள்!

DIN

எண்ணிய முடிதல் வேண்டும். நல்லவை எண்ணல் வேண்டும்.

மனிதன் சோறு உண்பதை விட்டாலும் விடலாம். ஆனால் தனியிடத்தில் தியானம் செய்ய மறக்கக்கூடாது!

பிறரை ஏமாற்றாமல் இருந்தாலே போதும்.  தெய்வ அருளுக்குப் பாத்திரமாகி விடுவோம்!

கவலையும், பயமும் எனக்குப் பகைவர்கள். நான் இப்பகைவர்களை வென்று தீர்த்தேன். அதனால் மரணத்தை வென்றேன். 

இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிகமிக உயர்ந்தது பொறுமை!

எவனையும் வெற்றுக் காகிதம் என ஒருபோதும் எண்ணாதே. ஒருநாள் அவன் பட்டமாய்ப் பறப்பான். நீயும் அவனை அண்ணாந்துதான் பார்க்க வேண்டும்.

பொய் சொல்லக்கூடாது பாப்பா! என்றும் புறம் சொல்லலாகாது பாப்பா! தெய்வம் நமக்குத் துணை பாப்பா! ஒரு தீங்கு வர மாட்டாது பாப்பா!

ஏதும் அறியாமலிருப்பது அறியாமை இல்லை. கண்டதெற்கெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டு, காலத்தையும், வாழ்வையும் வீணாக்குவதுதான் அறியாமை!

பயமின்றி உழையுங்கள்! சலிப்புக்கு ஒரு போதும் இடங்கொடாதீர்கள்.

கல்வியும் தவமும் எந்தப் பிராயத்திலும் தொடங்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

SCROLL FOR NEXT