எண்ணிய முடிதல் வேண்டும். நல்லவை எண்ணல் வேண்டும்.
மனிதன் சோறு உண்பதை விட்டாலும் விடலாம். ஆனால் தனியிடத்தில் தியானம் செய்ய மறக்கக்கூடாது!
பிறரை ஏமாற்றாமல் இருந்தாலே போதும். தெய்வ அருளுக்குப் பாத்திரமாகி விடுவோம்!
கவலையும், பயமும் எனக்குப் பகைவர்கள். நான் இப்பகைவர்களை வென்று தீர்த்தேன். அதனால் மரணத்தை வென்றேன்.
இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிகமிக உயர்ந்தது பொறுமை!
எவனையும் வெற்றுக் காகிதம் என ஒருபோதும் எண்ணாதே. ஒருநாள் அவன் பட்டமாய்ப் பறப்பான். நீயும் அவனை அண்ணாந்துதான் பார்க்க வேண்டும்.
பொய் சொல்லக்கூடாது பாப்பா! என்றும் புறம் சொல்லலாகாது பாப்பா! தெய்வம் நமக்குத் துணை பாப்பா! ஒரு தீங்கு வர மாட்டாது பாப்பா!
ஏதும் அறியாமலிருப்பது அறியாமை இல்லை. கண்டதெற்கெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டு, காலத்தையும், வாழ்வையும் வீணாக்குவதுதான் அறியாமை!
பயமின்றி உழையுங்கள்! சலிப்புக்கு ஒரு போதும் இடங்கொடாதீர்கள்.
கல்வியும் தவமும் எந்தப் பிராயத்திலும் தொடங்கலாம்.