அறிவை முதலீடாக வைத்து அரண்மனையை வாங்கலாம். ஆசையை முதலீடாக வைத்தால் துன்பத்தைத்தான் வாங்க முடியும்.
- விவேகானந்தர்
நமது நன்மையைப் பெற நாம் தவறிவிட்டாலும் பிறர் பெறப்போகும் நன்மைக்காக உதவுவதே மனிதத் தன்மையாகும்.
- ஜார்ஜ் எலியட்
சான்றோராவதற்கு அறிவில் தெளிவு, உயர்ந்த புத்தி, சீரிய சிந்தனை, புதிய கருத்தைக் கேட்கும் மனப்பான்மை, நினைவாற்றல் ஆகியவை தேவை.
- ரூசோ
தேவைகளை குறைத்துக்கொண்டு போகும்போது தெய்வத்தன்மை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
- சாக்ரடீஸ்
முயற்சியைக் கைக்கொள்பவனின் உடலில் சக்தி பாய்ந்து வருகிறது.
- எமர்சன்
காலத்தை வீணாக்காதவன் வறுமையைத் துரத்திவிடுகிறான்.
- இங்கர்சால்
நம் குறைகளை நாமே அடையாளம் காண்பதுதான் வளர்ச்சியின் அடையாளம்.
- யாரோ
தவறு நேர்ந்துவிடுமே எனத் தயங்காதே. தவறே செய்யாதவன் முயற்சியே செய்யாதவன் ஆவான்.
- தியோடர் ரூஸ்வெல்ட்
உன்னைவிட உயர்ந்த சான்றோர்களுடன் நட்பு கொள்.
-கன்ஃபூஷியஸ்
வாழ்வில் உயர்ந்தவர்கள் அனைவரும் நேர்மறை எண்ணம் கொண்டவர்களே.
- அப்துல் கலாம்