""எதுக்கும்மா தம்பியை திட்டறே?''
""பின்னே?....இன்னிக்குத்தான் ஸ்கூலுக்குப் போய் வந்திருக்கான்..... "மூணாவது அலை எப்போ வரும்?' னு கேட்கிறான்!''
எல் . இரவி,
செ. புதார்
""நீ ஊட்டி பார்த்திருக்கியா?...
""ம்ஹூம்!...பார்த்ததில்லை...''
""தங்கச்சிக்கு சாப்பாடு "ஊட்டி' விடப்போறேன் வந்து பாரு...''
எஸ் . பிரபுராஜா,
செல்லூர் மதுரை - 625002
""ராமுவுக்கும், எனக்கும் ஒரே வயசுடா...''
""ஆளுக்கு ஆறு மாசமா?''
மு . பெரியசாமி,
திருத்துறைப்பூண்டி - 614715
""திட்டினா எனக்கு கோபம் வரும்.''
நான் அப்படி இல்லை...கோபம்
வந்தா தான் திட்டுவேன்.
என்.பர்வதவர்த்தினி
சென்னை
""எதுக்குடா உன் ஃபிரெண்டை கோச்சுக்கறே?''
""நான் தூங்கறேன் வாத்தியார் வந்தா சொல்லுடான்னு சொன்னேன்....''
""சரி, அதுக்கு என்ன?''
""வாத்தியார் வந்த உடனே அவருகிட்டே சொல்லிட்டான்!''
கோ . யனிலா,
திருவொற்றியூர்
கணக்கு பரிட்சையில் வழிக்கு மார்க் உண்டு..''
""கணக்குக்கு மார்க் வாங்கற வழி
என்ன ? அதைச் சொல்லு..''
ஏ . நாகராஜன்,
சென்னை