அறத்துப்பால் - அதிகாரம் 19 - பாடல் 8
- திருக்குறள்
நேர்மையாய் நெருங்கிப் பழகியோர்
குறைகளைக் கூடப் பிறரிடத்தில்
புறங்கூறித் தூற்றும் இயல்புடையோர்
பரம்பரைப் பண்பு மாறாது
கூடியிருந்தோர் குற்றங்களைப்
பிறரிடத்தில் கூறுவோர்
ஏதும் அறியா மற்றவரை
எந்த வகையில் விட்டுவைப்பார்?
-ஆசி.கண்ணம்பிரத்தினம்