கேள்வி: இரவில் வரும் நிலவினால் தாவரங்களுக்கு ஏதாவது பயன்கள் உண்டா?
பதில்: நிலவின் ஒளி உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் என்பது பொதுவான நம்பிக்கை.
தாவரங்கள் பச்சையம் தயாரிப்பதற்கு ஒளி மிகவும் அவசியம். அப்படியானால் நிலவின் மூலம் அவற்றுக்கு ஒளி கிடைக்கத்தானே செய்கிறது? அப்படியானால் நிலவின் ஒளி மூலமும் தாவரங்கள் பச்சையம் தயாரிக்கலாமே என்று நாம் நினைக்கலாம்.
ஆனால் சூரிய ஒளி மூலம் கிடைக்கும் சக்திக்கும் நிலவின் ஒளி மூலம் கிடைக்கும் சக்திக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். அதன்படி பார்த்தால் நிலவின் ஒளியை வைத்துக் கொண்டு தாவரங்கள் பச்சையம் தயாரிக்கவே முடியாது என்பதுதான் உண்மை. ஆம், தாவரங்களுக்கு நிலவின் ஒளியால் எந்தப் பயனும் இல்லை.
ஆனால், நிலவின் வளர்பிறை, தேய்பிறை காலங்களில் தாவரங்களின் வளர்ச்சி ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்படுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.