பொருட்பால் - அதிகாரம் 108 - பாடல் 7
- திருக்குறள்
கொடுத்து உதவ எண்ணாமல்
இறுக்கமாக வாழ்பவர்
உண்டு மீதியிருந்தாலும்
ஒருவருக்கும் கொடுத்திடார்
வன்முறையால் மிரட்டி
அடித்துக் கேட்பவரிடத்திலே
அனைத்தும் பறி கொடுப்பார்கள்
அப்போதுதான் உணர்வார்கள்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்