சிறுவர்மணி

எழிற்கொடைகள்!

புலவர் முத்து முருகன்


கண்கவரும் தோற்றங்களில் 
சிரிப்போம் - மணங்
கமழ்ந்திடவே அழகாய் இதழ் விரிப்போம்!

வண்ணம் பல கொண்ட  நாங்கள் 
பூக்கள்! - புலவர்
வடித்திடுவார் எம்மைப் போற்றிப் பாக்கள்!

காலை இளம் பொழுதுகளில் 
மலர்வோம்! - அந்திக்
கருக்கலிலும் எம்மில் சிலர் அலர்வோம்!

சோலையோடு தோட்டங்களில் 
பூப்போம்! - உள்ளம் 
சொக்கும் வண்ணம் காற்றில் மணம் சேர்ப்போம்!

இயற்கை தந்த எழிற்கொடைகள்
நாங்கள் - எமக்கு 
இணையழகு கண்ட துண்டோ நீங்கள்

பயன் மிகுந்த வாழ்வு 
எமதாகும்! - எம்மைப் 
பாராட்டும் கடமை  உமதாகும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

SCROLL FOR NEXT