""எதுக்கு போஸ்டர்லே கீழே ஒரு வால் இருக்குது?''
""இதுதான் வால் போஸ்டர்!''
மு . மதிவாணன்,
அரூர் - 636903.
""எதுக்குடா கண்ணாடியைக் கொண்டுவந்து காமிக்கிறே?''
""உன் உடம்பை பத்திரமா பாத்துக்கோன்னு அந்த அங்கிள் உங்கிட்டே சொன்னாரே தாத்தா!''
மு . சுகாரா,
தொண்டி.
""அந்தப் பாம்பு ரெண்டு தடவை சட்டை உரிக்குதே ஏன்?''
""அதுவா?....ரெண்டாவதா உரிக்கிறது பனியனோ என்னவோ!''
செங்காந்தள்,
சென்னை - 6000125.
""நீங்க ரெண்டு பேரும் எந்த ஸ்கூல்லே படிக்கிறீங்க?
""நான் சாம்சங், இவன் ரெட்மி!''
பி . பரத்,
சிதம்பரம் - 608002.
""இப்போ மணி என்ன?''
""இப்பவும் மணி எனக்கு சித்தப்பாதான்!''
எஸ் . பி . விஜயராகவன்,
பெசன்ட்நகர்.
""எருமைமாட்டின் உபயோகங்கள் என்ன?''
""பால் தருகிறது. மேலும் பெற்றோர்கள் நம்மைத் திட்டுவதற்கும் பயன்படுகிறது!''
ஆர் . சாயிராம்,
கந்தகுமாரன் - 608305.