கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் இதிகாசங்களில் ஒன்றின் பெயர் கிடைக்கும். எளிதில் கண்டுபிடித்து விடுவீர்கள்...
1. பெரிய பணக்கார விவசாயியை இப்படி அழைப்பார்கள்...
2. இப்போது இந்தப் பழம் நிறைய கிடைக்கின்றது...
3. இந்த மயக்கம் இருந்தால் எளிதில் வெற்றி கிடைக்காது...
4. சிறிய ஊர்களில் இருப்பவர்கள் பெரிய ஊரை இப்படி அழைப்பார்கள்...
5. எந்தச் செயலுக்கும் முதலில் இது இருக்கும்...
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. மிராசுதார்,
2. மாம்பழம்,
3. தயக்கம்,
4. பட்டணம்,
5. ஆரம்பம்.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : ராமாயணம்