நல்ல எண்ணங்கள் இனிமையான மொழிகளாகின்றன.
- கதே
அமைதியும், சாந்தமும் கொண்ட மனிதனுக்கு எல்லா இடமும் அரண்
மனையே.
- லில்லி
மனிதனை தெய்வமாக்க வேண்டும் என்பது எல்லா சமயங்களின் மையக் கருத்து.
- விவேகானந்தர்
நம்பிக்கையோடு நகர்ந்துகொண்டே இரு. ஓர் இடத்தில் வெற்றி காத்திருக்கும் கடலாக!
- அப்துல் கலாம்
பகுத்தறிவற்றவை கடவுளை நினைப்பதில்லை. பகுத்தறிவு உள்ள நீ ஒரு நிமிடமாவது பிரார்த்தனை செய்.
- கிருபானந்தவாரியார்
கேட்பது நமது நிலை. கொடுப்பது இறையவர் அருள். மனிதன் எதையும் சாதிக்கலாம். ஆனால் அமைதியையும், அருளையும் தருவது இறையவரே.
- ஜெயேந்திரர்
தன் குறைகளைக் கண்டு அதைத் திருத்திக்கொண்டிருப்பவனுக்கு மற்றவர்களின் குறைகளைப் பார்க்க நேரமிருக்காது.
- யாரோ
முன்னேறும் சந்தர்ப்பங்கள் தாமாக வருவதில்லை. அவை உருவாக்கப்படுகின்றன.
- அலிஸன் ஸ்வெட்மார்ட்டன்
அதிர்ஷ்டம் எப்பொழுதும் சுறுசுறுப்பைத் தொடர்ந்து சென்று கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காணலாம்.
- கோல்ட்ஸ்மித்
நாம் கடவுளிடம் எதை வேண்டிக் கொண்டாலும், நாமும் அதற்காக உழைக்க வேண்டும்.
- ஜெரிமி டெய்லர்