சிறுவர்மணி

பொன்மொழிகள்

DIN

நல்ல எண்ணங்கள் இனிமையான மொழிகளாகின்றன. 
- கதே

அமைதியும், சாந்தமும் கொண்ட மனிதனுக்கு எல்லா இடமும் அரண்
மனையே. 
- லில்லி

மனிதனை தெய்வமாக்க வேண்டும் என்பது எல்லா சமயங்களின் மையக் கருத்து. 
- விவேகானந்தர்

நம்பிக்கையோடு நகர்ந்துகொண்டே இரு. ஓர் இடத்தில் வெற்றி காத்திருக்கும் கடலாக! 
- அப்துல் கலாம்

பகுத்தறிவற்றவை கடவுளை நினைப்பதில்லை. பகுத்தறிவு உள்ள நீ ஒரு நிமிடமாவது பிரார்த்தனை செய். 
- கிருபானந்தவாரியார்

கேட்பது நமது நிலை. கொடுப்பது இறையவர் அருள். மனிதன் எதையும் சாதிக்கலாம். ஆனால் அமைதியையும், அருளையும் தருவது இறையவரே. 
- ஜெயேந்திரர்

தன் குறைகளைக் கண்டு அதைத் திருத்திக்கொண்டிருப்பவனுக்கு மற்றவர்களின் குறைகளைப் பார்க்க நேரமிருக்காது. 
- யாரோ

முன்னேறும் சந்தர்ப்பங்கள் தாமாக வருவதில்லை. அவை உருவாக்கப்படுகின்றன. 
- அலிஸன் ஸ்வெட்மார்ட்டன்

அதிர்ஷ்டம் எப்பொழுதும் சுறுசுறுப்பைத் தொடர்ந்து சென்று கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காணலாம். 
- கோல்ட்ஸ்மித்

நாம் கடவுளிடம் எதை வேண்டிக் கொண்டாலும், நாமும் அதற்காக உழைக்க வேண்டும். 
- ஜெரிமி டெய்லர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி அருகே காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

ஒசூா் செயின்ட் பீட்டா் மருத்துவக் கல்லூரியில் மாா்பக புற்றநோய் கண்டறியும் பிரிவு தொடக்கம்

யானை தாக்கியதில் விவசாயி பலி

மேம்பாலம் கட்டித் தராததால் தோ்தல் புறக்கணிப்பு

தமிழக- கா்நாடக எல்லையில் போக்குவரத்து நெரிசல்

SCROLL FOR NEXT