கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் கிடைக்கும் சொல் வானில் வரும் கோள் ஒன்றைக் குறிக்கும் சொல். மடமடவென்று கட்டங்களை நிரப்புங்கள்...
1. சில சோதனைகளில் பலருக்கும் இது தர்மமாக வரும்...
2. மேலுலகத் தலைவர்களில் ஒருவர்...
3. எதையும் கவனமாகக் கையாள வேண்டிய செயலை இப்படிச் சொல்வார்கள்...
4. உங்கள் முன்னோர்கள், அவர்களின் முன்னோர்கள் இப்படியே அடுக்கிக் கொண்டே போனால் இது வரும்...
5. அரசனுக்கு மறு பெயர்
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1.சங்கடம்,
2. இந்திரன்,
3. பத்திரம்,
4. பரம்பரை,
5. மன்னவன்.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : சந்திரன்