சிறுவர்மணி

வியாசரின் பொன்மொழிகள்!

அ . ப . ஜெயபால்


சாத்விகமான ஒரு மனிதன் உலகில் இருக்கும்வரை மழை பெய்துகொண்டிருக்கும்.

எண்ணம், சொல், செயல் அனைத்திலும் மனிதன் அடக்கத்தைக் கடைப்பிடிக்கப் பழக வேண்டும்.

இறைவனுக்குப் படைத்த பின்னரே தினமும் உணவை உண்ண வேண்டும்.

அறத்துடன் கூடிய வழியில் செல்வத்தைச் சேர்க்க வேண்டும். பின்பு அதனைக் கொண்டு கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.

இறைவனை நினைப்போர்க்கு குறைவு ஏதும் ஏற்படாது.

அறம் என்னும் தோணியில் வாழ்க்கைக் கடலை எளிதாகக் கடக்கலாம்.

ஆசையற்றவனுக்கு அறிவு சிறப்பாக இருக்கும்

அறத்தில் நம்பிக்கை அற்றவனுக்கு வாழ்வில் பிடிப்பு இருக்காது.

சத்தியம் அடக்கத்தைக் கொடுக்கும். அடக்கத்தினால் பேரின்பத்தை அடையலாம்.

கடவுளைச் சரணடைவதே கல்வியின் பயன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT