சாத்விகமான ஒரு மனிதன் உலகில் இருக்கும்வரை மழை பெய்துகொண்டிருக்கும்.
எண்ணம், சொல், செயல் அனைத்திலும் மனிதன் அடக்கத்தைக் கடைப்பிடிக்கப் பழக வேண்டும்.
இறைவனுக்குப் படைத்த பின்னரே தினமும் உணவை உண்ண வேண்டும்.
அறத்துடன் கூடிய வழியில் செல்வத்தைச் சேர்க்க வேண்டும். பின்பு அதனைக் கொண்டு கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.
இறைவனை நினைப்போர்க்கு குறைவு ஏதும் ஏற்படாது.
அறம் என்னும் தோணியில் வாழ்க்கைக் கடலை எளிதாகக் கடக்கலாம்.
ஆசையற்றவனுக்கு அறிவு சிறப்பாக இருக்கும்
அறத்தில் நம்பிக்கை அற்றவனுக்கு வாழ்வில் பிடிப்பு இருக்காது.
சத்தியம் அடக்கத்தைக் கொடுக்கும். அடக்கத்தினால் பேரின்பத்தை அடையலாம்.
கடவுளைச் சரணடைவதே கல்வியின் பயன்.