பொருட்பால் - அதிகாரம் 44 - பாடல் 7
செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பாலது அன்றிக் கெடும்.
- திருக்குறள்
செய்ய வேண்டிய நன்மைகளைச்
செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்து
தன்னலமாய் வாழ்பவனால்
எந்தப் பயனும் இல்லையே
நன்மை செய்யாத செல்வத்தால்
மீள முடியாத துன்பங்கள்
மேலும் மேலும் வந்திடும்
அதனால் செல்வம் அழிந்திடும்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்